சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைவடைந்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருளின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை(11) கூட உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுத் தொடர்பில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் இன்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


0 Comments