Home » » ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்பனை செய்த நபர்! சுற்றிவளைத்த பொலிஸார்

ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்பனை செய்த நபர்! சுற்றிவளைத்த பொலிஸார்

நாட்டில் ஏற்பட்டு அசாதாரன நிலமையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக அதிக விலையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை நாவலபிட்டி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
நாவலபிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யபட்டதாகவும் சந்தேக நபர் 45வயதுடையவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
கைது செய்யபட்ட நபரை நாவலபிட்டி நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |