வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த நபர் வெளிநாட்டில் வசிப்போருடன் தொடர்புகளை பேணியதன் காரணத்தினால் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையின் தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் இரத்த மாதிரிகளை பெற்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்களிற்காக அனுப்பிவைத்திருந்தனர்.
இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
0 comments: