மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள களுவாஞ்சிகுடியை சேர்ந்த நபர் கொரோனா சோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பியோடி வந்தவர் என தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த குறித்த நபர் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்தே இவ்விடயம் தெரியவந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் கொழும்பில் சீனாவைச் சேர்ந்த நபர்களுடன் இணைந்து பணியாற்றியதுடன் தமக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறி மட்டக்களப்புக்கு வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கொரோனாத் தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கிருமித் தொற்று ஏற்படாத வகையிலான சகல வசதிகளும் கொண்ட தனிமைப் படுத்தப்பட்டு விடுதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் நோயாளிகளை கொண்டு செல்வதற்காக விசேடமான நுழைவாயில் மட்டக்களப்பு சிறைச்சாலை வீதியில் அமைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த நபரை நேற்றையதினம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பகுதி மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் மட்டக்களப்பில் பதற்றமான சூழ்நிலை நிலவியமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த குறித்த நபர் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்தே இவ்விடயம் தெரியவந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் கொழும்பில் சீனாவைச் சேர்ந்த நபர்களுடன் இணைந்து பணியாற்றியதுடன் தமக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறி மட்டக்களப்புக்கு வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கொரோனாத் தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கிருமித் தொற்று ஏற்படாத வகையிலான சகல வசதிகளும் கொண்ட தனிமைப் படுத்தப்பட்டு விடுதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் நோயாளிகளை கொண்டு செல்வதற்காக விசேடமான நுழைவாயில் மட்டக்களப்பு சிறைச்சாலை வீதியில் அமைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த நபரை நேற்றையதினம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பகுதி மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் மட்டக்களப்பில் பதற்றமான சூழ்நிலை நிலவியமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments: