உலகை அச்சுறுத்திவரும் உயிர் கொல்லி கொரோனா வைரஸின் தாக்கம் ஸ்ரீலங்காவிலும் அதிகரித்துவருகின்றது.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 102 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் 24.03.2020 மாலை 7.30 வரையில் ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி ஸ்ரீலங்காவில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 102 ஆகவும் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 100 ஆகவும் மருத்துவமனையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 229 ஆகவும் தேறியோர் மற்றும் குணமடைந்து வெளியேறியோர் இருவர் ஆகவும் காணப்படுகின்றது.
சிகிச்சை பெற்றுவரும் 100 நோயாளர்களுள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: