Home » » யாழ், கொழும்பு, கண்டி வைத்தியசாலைகளில் பாரிய குண்டுத் தாக்குதல்களுக்குத் திட்டம்!

யாழ், கொழும்பு, கண்டி வைத்தியசாலைகளில் பாரிய குண்டுத் தாக்குதல்களுக்குத் திட்டம்!

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி வைத்தியசாலைகளில் மிகப் பெரிய குண்டு தாக்குதல்களை மேற்கொள்ள சஹ்ரான் குழுவினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. குண்டுதாக்குதலையடுத்து தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர். இந்நிலையிலேயே இந்த வருடமும் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ள சஹ்ரான் குழுவினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிரதான ஹோட்டல்கள், பிரதான வைத்தியசாலைகளில் ஒரே நேரத்தில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முதல் முறையாக கடந்த வாரம் தெரியவந்துள்ளது.
நோயாளர் காவு வண்டிகளில் வெடி பொருட்களை நிரப்பி, கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி வைத்தியசாலைகளில் மிகப் பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள தற்கொலை தாக்குதலுக்கான பயிற்சிகளை பெற்றிருந்த அடிப்படைவாதிகள் தெரிவித்துள்ளதாக ஆணைக்குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |