Home » » கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் பெரு விளையாட்டுக்களுள் ஒன்றான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 2020 ஆம் ஆண்டுக்கான 16 வயதிற்குட்பட்ட சம்பியன்களாக அரபா இல்லமும் , 18 வயதிற்கட்பட்ட சம்பியன்களாக சபா இல்லமும் , 20 வயதிற்குட்பட்ட சம்பியன்களாக ஹிரா இல்லமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மைதானத்தின் மிகவும் சிறப்பான முறையில்  ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி சுற்றுப் போட்டியில் 16 வயதிற்குட்பட்ட போட்டியில் ஹிரா இல்லம் இரண்டாம் இடத்தையும் , சபா இல்லம் மூன்றாம் இடத்தையும் , 18 வயதிற்குட்பட்ட போட்டியல் மர்வா இல்லம் இரண்டாம் இடத்தையும் ஹிரா இல்லம் மூன்றாம் இடத்தையும் , 20 வயதிற்குட்பட்ட போட்டியில் அரபா இல்லம் இரண்டாம் இடத்தையும் , சபா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெறறுக் கொண்டன.

கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி சுற்றுப் போட்டிக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியர் டொக்டர் ஏ.ஏ.எம்.அஸாட் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விளையாட்டு  உடற்கூறு  பரிசோதனை வைத்தியர் டொக்டர் ஏ.எம்.புஹைம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் எம்.ஐ.எம்.முஸ்தாக் , உதவி அதிபர் எம்.எச்.எம்.அபுபக்கர் மற்றும் கல்லூரின் விளையாட்டுக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |