Home » » கிழக்கில் இடம்பெற்ற விபத்து! ஸ்தலத்தில் பலியான முதியவர்

கிழக்கில் இடம்பெற்ற விபத்து! ஸ்தலத்தில் பலியான முதியவர்

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் பெண் ஒருவர் செலுத்திய கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தானது இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதுடன் இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமிருவர் படுகாயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு ஊறணி பகுதியில் உறவினர் வீட்டில் இருந்து ஆரையம்பதி நோக்கி சென்ற கார் வேகக்கட்டுடைப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்தவர் 72 வயதுடையவர் எனவும் தனது ஊரான அரசடித்தீவுக்கு செல்வதற்கு வீதியோரத்தில் நின்றவேளையே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |