Home » » சஜித் தொடர்பில் நாடாளுமன்றில் முக்கிய அறிவிப்பு!

சஜித் தொடர்பில் நாடாளுமன்றில் முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்கட்சி தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்தார்.
எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சி தலைவராக அறிவிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

you may like this
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |