அம்பாறை - ஒலுவில் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பகல் 12 மணியளவில் 5000 ரூபாய் நாணயத்தாள் ஒன்றுடன் இன்று குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் தேசிய புலனாய்வு பிரிவினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments: