- செ.துஜியந்தன் -
மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றும் முருகேசு சுபைந்திரராஜா 2018 இல் இருந்து இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
கல்முனை பாண்டிருப்பு கிராமத்தைச்சேர்ந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை பாண்டிருப்பு மகாவித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையிலும் கற்றுள்ளார். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரிப் பட்டத்தையும் தேசிய கல்வி நிறுவனத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.
1990 இல் ஆசிரியராக கல்முனை ஸ்ரீ மாமாங்கவித்தியாலத்திலும் அதன்பின்பு கல்முனை கார்மேல் பற்றிமாNசியப்பாடசாலையிலும் ; ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கார்மேல்பற்றிமா தேசியபாடசாலையில் ஆசிரியராக பணியாற்றியபோது 2006 இல் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து அங்கு பிரதி அதிபராகவும், பின் அதிபராகவும் சேவையாற்றியுள்ளார். 2017 முதல் மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலம் தேசியப்பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றிவருகின்றார். தற்போது 2018- இருந்து அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் பல்வேறு சமய, சமூக சேவை மற்றும் பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதியாகவும் சிறந்த சமூகசேவையாளராகவும் இருந்து செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: