ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உப தலைவரும் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் அவர்களின் தயாரின் இழப்பு எமக்கு பேரிழப்பாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவரும் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான தோழர் இரா.துரைரட்ணம்(ரெட்ணம்)அவர்களி
அம்பாறை மாவட்டம் காரைதீவை பிற்பிடமாககொண்ட ஜந்து பிள்ளைகளின் தாயாரான அமரர் இராசையா அழகம்மா அவர்களின் மூத்த மகன் 1990ம் ஆண்டு நீர்ப்பாசன திணைக்களத்தில் வேலைசெய்யும் போது வாகனத்தோடு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.எனினும் மனம் தளராத இந்த வீரத்தாய் தனது கடைசி மகனை தோழர் ரெட்ணம் அவர்களை ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலைக்காக ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கியிருந்தார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் தோழர் ரெட்ணம் அவர்களின் தாயாரும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவ்வூர் மக்கள் அனைவரும் எமது கட்சிக்கும் எமது போரட்டங்களுக்கும் பேராதரவுதந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தோழர் ரெட்ணம் அவர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவரும் மத்திய குழு உறுப்பினரும் மூன்று தடவை கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றி வந்துள்ளதுடன் 37 வருடகாலம் கிழக்கு மாகாண மக்களின் பாதுகாவலனாகவும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒரு தொண்டனாகவும் பல்வேறு நெருக்கடியான காலகட்டத்திலும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றி வந்துள்ளார்.
தோழர் ரெட்ணம் அவர்களை ஈன்றெடுத்த அந்த மகத்தான தாயின் பிரிவால் துயருற்றிருக்கும் தோழர் ரெட்ணம் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
0 comments: