தன்னால் தனியாக போட்டியை திசைதிருப்ப முடியும் என்ற நம்பிக்கையிலேயே எந்தவொரு போட்டியிலும் தான் களமிறங்குவதாக இலங்கை 20க்கு 20 கிரிக்கட் அணித் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணியுடன் கண்டி பல்லேகலை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதி 20க்கு 20 போட்டியில், நான்கு பந்துகளில் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தி லசித் மாலிங்க சாதனை படைத்தார்.
இந்த நிலையில், குறித்த போட்டியின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே மாலிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
20க்கு 20 போட்டியிலும் 4 பந்துகளில் 4 விக்கட்டுக்களை வீழ்த்த முடிந்ததையிட்டு, மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறப்பிட்டுள்ளார்.
விக்கட்டுக்களை வீழ்த்தும் திறமை மற்றும் அதனைக் கட்டுப்படுத்துதல் என்பனவற்றை ஏனைய வீரர்களுடன் ஒப்பிடும்போது, அனுபவத்தின் அடிப்படையில் அந்தத் தகைமை தனக்கு அதிகமாகவே உள்ளதாக மாலிங்க கூறியுள்ளார்.
அணிக்கு அவசியமாக பெற்றுக்கொள்ள வேண்டியது விக்கட்டுக்கள் என்றால், தனது பந்துகளுக்கு எத்தனை ஓட்டங்கள் அடித்தாலும் அதனைத் தான் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிக்கலான தருணங்களை எதிர்கொள்வதை தான் மிகவும் விரும்புவதாகவும், இதனைப் பார்க்கும் இளம் வீரர்கள் சிக்கலான நிலைமையை எதிர்கொள்ள தயாரானால்தான் போட்டியில் வெற்றிபெறமுடியும் என லசித் மாலிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், 2020ஆம் ஆண்டில் இலங்கையில் சிறந்தவொரு 20க்கு 20 கிரிக்கட் அணியை உருவாக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணியுடன் கண்டி பல்லேகலை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதி 20க்கு 20 போட்டியில், நான்கு பந்துகளில் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தி லசித் மாலிங்க சாதனை படைத்தார்.
இந்த நிலையில், குறித்த போட்டியின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே மாலிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
20க்கு 20 போட்டியிலும் 4 பந்துகளில் 4 விக்கட்டுக்களை வீழ்த்த முடிந்ததையிட்டு, மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறப்பிட்டுள்ளார்.
விக்கட்டுக்களை வீழ்த்தும் திறமை மற்றும் அதனைக் கட்டுப்படுத்துதல் என்பனவற்றை ஏனைய வீரர்களுடன் ஒப்பிடும்போது, அனுபவத்தின் அடிப்படையில் அந்தத் தகைமை தனக்கு அதிகமாகவே உள்ளதாக மாலிங்க கூறியுள்ளார்.
அணிக்கு அவசியமாக பெற்றுக்கொள்ள வேண்டியது விக்கட்டுக்கள் என்றால், தனது பந்துகளுக்கு எத்தனை ஓட்டங்கள் அடித்தாலும் அதனைத் தான் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிக்கலான தருணங்களை எதிர்கொள்வதை தான் மிகவும் விரும்புவதாகவும், இதனைப் பார்க்கும் இளம் வீரர்கள் சிக்கலான நிலைமையை எதிர்கொள்ள தயாரானால்தான் போட்டியில் வெற்றிபெறமுடியும் என லசித் மாலிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், 2020ஆம் ஆண்டில் இலங்கையில் சிறந்தவொரு 20க்கு 20 கிரிக்கட் அணியை உருவாக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: