Home » » சிகிச்சைக்கு பணமில்லாமல் இருந்தோம்: அவரின் கடைசி ஆசைகூட நிறைவேறவில்லை; ராஜசேகர் மனைவி அதிர்ச்சி பேட்டி!

சிகிச்சைக்கு பணமில்லாமல் இருந்தோம்: அவரின் கடைசி ஆசைகூட நிறைவேறவில்லை; ராஜசேகர் மனைவி அதிர்ச்சி பேட்டி!

பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் சென்னையில் இன்று மரணமடைந்தார், இவரின் இழப்பு சினிமா வட்டாரங்களையும், தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில், ஹீரோக்களில் ஒருவராக நடித்த ராஜசேகர். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் தோன்றியவர். பிறகு, தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து படங்களை இயக்கினார்.
பாலைவனச் சோலை, சின்னப்பூவே மெல்லப் பேசு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம் உட்பட சில படங்களை இவர்கள் இயக்கினார்கள்.
’மனசுக்குள் மத்தாப்பு’ படத்தை இயக்கியபோது நடிகை சரண்யாவைத் திருமணம் செய்தார். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக சரண்யாவுடனான திருமணம் விவாகரத்தில் முடிய, இரண்டாவதாக தாரா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் தாரா கருத்து தெரிவிக்கையில், ‘மூச்சுத் திணறல் இருக்குன்னு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம், தனி மனுஷியா இருந்து கவனிச்சிட்டிருந்தேன். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. மருத்துவமனையில் பணம் கட்ட இயலவில்லை, இதனால் ரெண்டு நாள் மருத்துவம் பார்க்கவில்லை.
கடைசி நேரத்துல, ரத்த சம்பந்தம் இல்லாத தொலைக்காட்சி தொடர் இயக்குநர் விக்ரமாதித்யன் வந்து பணம் கட்டின பிறகே சிகிச்சையை தொடர்ந்தார்கள்.
மேலும் திரைப்படங்கள் எடுத்தார், சினிமாவுல நடிச்சார்னு என்ன பெருமை இருந்தாலும் பணம் சேர்க்கவில்லை . இவரைக் திருமணம் செய்ததிலிருந்து வாடகை வீட்டுலதான் இருந்தோம். இப்பத்தான் சின்னதா ஒரு ஃபிளாட் வாங்கினார். அதுல கிரஹப்பிரவேசம் நடத்தி இன்னும் குடியேறக்கூட இல்லை. சாகறதுக்குள் சொந்த வீட்டுல ஒரு நாள் வசிச்சிட்டுப் போயிடணும்கிறதுதான் அவரோட ஒரே ஆசையா இருந்தது. அது நிறைவேறலை என அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |