Home » » திருகோணமலையில் இளைஞன் கழுத்து வெட்டி கொலை! தாயாரை எச்சரித்த நீதிபதி!

திருகோணமலையில் இளைஞன் கழுத்து வெட்டி கொலை! தாயாரை எச்சரித்த நீதிபதி!

திருகோணமலை-கடற்படை முகாமுக்கு அருகில் தங்கத்துரை தனுஸ்டன் என்பவருடைய கழுத்தை வெட்டி கொலை செய்த சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி திருகோணமலை கடற்படை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒருவருடைய கழுத்தை வெட்டிக் கொலை செய்தமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் டேனியல் என்பவர் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பிணை கோரி திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டத்தரணி தனுஷ்க மெதகெதர ஊடாக பிணை விண்ணப்பம் செய்யப்பட்டு நேற்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்டு குறித்த வழக்கில் அனைத்து விடயங்களையும் பரிசீலனை செய்த போது இது ஒரு திட்டமிட்டு பயங்கரமாக மேற்கொள்ளப்பட்ட கொலை என நீதிபதி கூறினார்.
இலங்கை மாத்திரமில்லாமல் உலக மக்களையே அதிர்ச்சிக்கும் மக்களின் மனதை இருலடிக்கக்கூடியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒரு மனிதாபிமானமற்ற கொலை எனவும் குறித்த சந்தேக நபரின் தாயிடம் நீதிபதி கூறி எச்சரிக்கை செய்து குறித்த பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த இந்த கொலை சம்பவம் பற்றி ஒரு சரியான அணுகு முறையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பணித்ததோடு இது ஒரு பகிரங்கமான கொலை எனவும் இக்கொலை குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி பகிரங்கமாக எச்சரித்தார்.
என்னவெனில் இறந்தவரும் சந்தேக நபரும் நெருங்கிய நண்பர்கள் அந்த சந்தேக நபரை காதலித்த யுவதி பின்னர் அவரை பிரிந்து இறந்தவரை காதலிக்க தொடங்கியதன் காரணமாக சந்தேகநபர் வஞ்சம் தீர்க்கும் நோக்கில் இறந்த தங்கதுரை தனுஷ் என்பவரை மோட்டார் சைக்கிளை எடுத்து வருமாறு கூறி சந்தேகநபர் கத்தி ஒன்றை தமது உடலில் மறைத்து வைத்துசென்றுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையில் திருகோணமலை கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தமது உடம்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளார். கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்தத்துடன் ஓடிவந்து கடற்படை முகாமுக்கு முன்னால் அமைந்திருக்கும் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியிடம் தன்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கெஞ்சிக் கேட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதி அதனையும் பொருட்படுத்தாது ஓடிவிட்டார். இது அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகி உலகம் பூராகவும் பரப்பப்பட்டது. காயப்பட்டவருக்கு முச்சக்கரவண்டி சாரதி உதவியிருக்க முடியும். ஆனால் அந்த நேரம் அவர் உதவி செய்யவில்லை. உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றிருந்தால் அவரை காபாற்றியிருக்கலாம்.
எனவே நேற்றைய தினம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்ற நீதிபதி இது ஒரு மனித நேயமற்ற செயல் என முச்சக்கர வண்டியின் சாரதி பற்றியும் கடுமையாக விமர்சித்தார். இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் நடை பெறவில்லை எனவும் கூறி குறித்து பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |