Advertisement

Responsive Advertisement

வடக்கு, கிழக்கில் சேதமான இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த இந்து ஆலயங்களை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.



இதற்கமைவாக இந்த புனரமைப்பு பணிகள் தேசியக் கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு மற்றும் புனரமைப்பு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் 200மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் விசேட ஒதுக்கீடுடன் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை பெற்று மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் சேதமான இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Rating: 4.5
Diposkan Oleh:
Sayan

Post a Comment

0 Comments