அம்பலாங்கொட, கஹவ பகுதியில் இருந்து கொடகம வரையிலான கடற்கரை பகுதியில் கடல் நீர் பாதைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் காலி - கொழும்பு பிரதான வீதியில் கல் மற்றும் மணல் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் அலையின் காரணமாக இவ்வாறு கடல் நீர் வீதிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஒவ்வொரு வருடமும் இந்த இடத்தில் கடல் நீர் வீதிக்கு வருவதாகவும் இதற்கு இதுவரையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவம் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments: