கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக அரசு தரமுயர்த்தாது விட்டால் அரசுக்கான ஆதரவை விலக்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழ்தேசியக்கூட்டமைப்பு.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே தற்போது அரசாங்கத்துக்கு நாம் ஆதரவளித்து வருகின்றோம். எமது மக்களை இனியும் நாம் சமாதானப்படுத்த முடியாது. எனவேதான் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவிடக்கூடாதென்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் எம்.பி.யான ஹரிஷுமே மிகத்தீவிரமாகவுள்ளனர். இவர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை அரசு உதாசீனம் செய்கின்றது. இந்த அரசையும் ஜனாதிபதியையும் பிரதமரையும் கொண்டு வந்தவர்கள் நாங்கள். அந்த நன்றிக்கடன் உங்களுக்கு இருக்கின்றதா எனக்கேட்க விரும்பு கின்றோம்.
இந்நிலைமை ஏற்படக்கூடாதெனில் அங்கு தற்போது நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
0 comments: