நாட்டில் எந்தவொரு இடத்திலும் மின் துண்டிப்பு பற்றி உடனடியாக அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி செயலி (App) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் 50ஆவது ஆண்டின் நிறைவுக்கு அமைவாக மின்சார பாவனையாளர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த செயலி ஊடாக மின் துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்கள், மின்சார கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
0 comments: