மட்டக்களப்பு வவுணதீவில் நேற்றைய தினம் வீசிய கடும் காற்றினால் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொத்தியாவளை மற்றும் இலுப்பட்டிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியுள்ளது.
இதில் சுமார் 20 வீடுகளின் கூரைகள் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments: