Home » » ஏறாவூரில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி! மயிரிழையில் உயிர் தப்பிய முஸ்லிம் குடும்பம்

ஏறாவூரில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி! மயிரிழையில் உயிர் தப்பிய முஸ்லிம் குடும்பம்

மட்டக்களப்பு - ஏறாவூரில் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டி பெரியபுல்லுமலை வெலிக்காகண்டி குளக்கட்டு நோக்கிப் பயணித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஏறாவூரைச் சேர்ந்த மொஹமட் இர்பான், தமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இந்த முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.
மனைவியையும் பிள்ளைகளையும் இறக்கிவிட்டு முச்சக்கர வண்டியை அடுத்த பக்கமாக திருப்பும்போது தீப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீப்பற்றியதையடுத்து முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக வௌியே பாய்ந்துள்ளார்.
இதனால் யாருக்கும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |