Home » » கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட அதிரடிப்படையினர் சோதனை

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விசேட அதிரடிப்படையினர் சோதனை

கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பலத்த சோதனை நடவடிக்கைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் எஸ். பகீரதன் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் பெருமளவிலான விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக நிர்வாகப் பகுதி மற்றும் மாணவர் விடுதிகள் போன்றன சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பல்கலைக்கழக மாணிய ஆணைக் குழுவானது மீண்டும் பல்கலைக் கழகம் ஆரம்பிப்பதற்கான திகதி கிடைக்கப் பெறாமையினால் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை கிழக்கு பல்கலைக் கழத்தின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லையெனவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பலத்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலவி வருவதுடன் மக்களும் பீதி அடைந்து காணப்படுகின்றனர்.
இந்நிலையில் மக்களின் அச்சத்ததை போக்கும் வகையில் பொலிசார் இராணுவம் என பாதுகாப்பு கடமையில் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |