தேசிய தவ்ஹீத் அமைப்பைச்சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் இன்றையதினம் கெப்பிட்டிகொலாவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெப்பிட்டிக்கொலாவையிலுள்ள தேசிய தவ்ஹீத் அமைப்பின் அலுவலகத்தில் இன்றையதினம் நடத்திய சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த அலுவலகத்திலிருந்து பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்,18 கணனி வன்தட்டுக்கள்,48 கணனி பாகங்கள்மற்றும் பல ஆவணங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
0 comments: