குருநாகலில் பெண்களுக்கு கருத்தடை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட வைத்தியருக்கு எதிராக இதுவரை குருநாகல் வைத்தியசாலையில் 190 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் இன்று முற்பகல் 50 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையிலும் 13 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை முறைப்பாடு செய்யும் தாய்மார்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் மாத்திரம் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கு விசேட வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று குருநாகலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments: