தென் இலங்கையில் தற்பொழுது நடைபெற்று வருகின்ற வன்முறைச் சம்பவங்களில் ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர் கொல்லப்பட்டதாக தெரியவருகின்றது.
கொல்லப்பட்ட இளைஞனின் பெயர் பௌசில் அமிர் என்றும் அவரது வயது45 என்றும் தெரியவருகின்றது.
நாத்தாண்டிய என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்திற்கு சற்று முன்னர், நாத்தாண்டியவில் உள்ள, 'இயலமோதர' பகுதியில் வன்முறைகள் கட்விழ்த்துவிட்டிருந்த கும்பல், முஸ்லிம் பள்ளிவாயலுக்கு எதிரில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட முஸ்லிம் குடும்பஸ்தர் தச்சுவேலை செய்பவர் என்றும், பலமாகத் தாக்கப்பட்டு, வாள்களினால் வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது மரணமடைந்ததாகத் தெரியவருகின்றது.
0 comments: