Home » » வெளிநாட்டு படைகள் களத்தில்? வெலிகந்தை புகையிரத நிலையத்தில் பயங்கரவாத சந்தேகியைக் கைதுசெய்தது யார்?

வெளிநாட்டு படைகள் களத்தில்? வெலிகந்தை புகையிரத நிலையத்தில் பயங்கரவாத சந்தேகியைக் கைதுசெய்தது யார்?


வெலிகந்தை புகையிரத நிலையத்தில் வைத்து ஒரு தீவிரவாத சந்தேகியை சிறப்பு படைப்பிரிவு ஒன்று கைதுசெய்வது போன்றதான புகைப்படம் வெளியாகியுள்ளது.

யார் கைதுசெய்யப்பட்டார், எப்பொழுது கைதுசெய்யப்பட்டார் என்ற விபரம் இதுவரை தெரியவரவில்லை.

ஆனால் வெளியான புகைப்படங்கள் சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பிவருகின்றன.

அந்தப் புகைப்படத்தில் உள்ள ஆயுதம் தாங்கிய படைப்பிரிவினர் சிறிலங்காவின் படைப்பிரிவினர் அணியும் சீருடைகளை அணியாமல், வித்தியாசமான சீருடைகளை அணிந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்தோடு, வித்தியாசமான சீருடையுடன் முகத்தை மறைத்தபடி காணப்படும் இரண்டு படைவீரர்கள் மேற்கத்தேய தேக நிறத்தை உடையர்களாக காட்சி தருகின்றார்கள்.

இவர்கள் யார்?

சிறிலங்கா படையினருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்ற அமெரிக்காவின் 'சீல்ஸ்' என்று அழைக்கப்படுகின்ற ஈருடகப் படையணியைச் சேர்ந்தவர்கள் அணிந்தது போன்றதான சீருடையை அந்த படைவீரர்கள் அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.









Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |