Home » » சஹ்ரானின் தங்கைக்கு பணம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? உண்மை அம்பலம்

சஹ்ரானின் தங்கைக்கு பணம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? உண்மை அம்பலம்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் காசிமிடம் இருந்து தாம் பணத்தை பெற்றுக்கொண்டதாக அவர் தங்கை மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக் கொண்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை மதனியாவின் வீட்டைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து 20 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து சஹ்ரானின் இளைய சகோதரியான மதனியா நேற்றுமுன்தினம் காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்தப் பணம் எப்படி வந்தது என்ற விசாரணைகளை பொலிஸார் நடத்தினர்.
இதன்போதே, தனது அண்ணனான சஹ்ரானே இந்தப் பணத்தைக் கொடுத்தார் என்பதை மதனியா ஒப்புக் கொண்டுள்ளார்.
தன்னை கொழும்புக்கு வருமாறு, சஹ்ரான் அழைத்ததாகவும், இதையடுத்து வான் ஒன்றில் கொழும்பு சென்று சஹ்ரானை கல்கிசையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி சந்தித்தாகவும், மதனியா கூறியுள்ளார்.
இதன்போதே, தேசிய ஜமாத் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக, 20 இலட்சம் ரூபாவை தன்னிடம் சஹ்ரான் கொடுத்தார் என்றும், மதனியா கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |