Home » » சொர்க்கத்தில் சஹ்ரான்! வைத்தியசாலையில் உள்ள மனைவியை பார்க்கச் சென்ற பா.உறுப்பினர்

சொர்க்கத்தில் சஹ்ரான்! வைத்தியசாலையில் உள்ள மனைவியை பார்க்கச் சென்ற பா.உறுப்பினர்

மக்களை கொன்று குவித்து விட்டு சஹ்ரான் சொர்க்கத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரது மனைவியை பார்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இவ்வாறு செயற்படுபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே அரசாங்கம் மீது பேராயர் போன்றவர்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றார்கள்.
அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
நாடளாவிய ரீதியில் காணப்படும் தொளஹீத் ஜமாத் பள்ளிவாசல்களை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மதங்களையும் ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |