நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் நிச்சயமாக வெளிநாட்டு சக்திகள் உள்ளன. அவர்களின் வழிநடத்தலிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியொன்றில் இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கூறுகையில்,
கடந்த ஒரு தசாப்தத்தில் சுதந்திரத்தை நன்றாக அனுபவித்தபோதும் தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொல்லாமையே மீண்டும் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நிச்சயமாக வெளிநாட்டு சக்திகள் உள்ளன. அவர்களின் வழிநடத்தாலில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதில் சகல தரப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும். புலனாய்வுத்துறை தகவல் கிடைத்ததில் இருந்து அத பின்னர் இதனை கையாண்ட அனைவரும் பொறுப்பாளிகள் தான்.
தேசிய பாதுகாப்பு விடயத்தில் சகலரும் அலட்சியமாக இருந்துள்ளனர். அரசியல் வாதிகளும் இதில் தமது கடமைகளை தவறவிட்டுள்ளனர். ஆகவே அடுத்தகட்டமான செய்யவேண்டியவற்றை சரியாக கையாள வேண்டும் என்றார்.
0 comments: