ஹோமாகமை ஆரம்ப வைத்தியசாலையில் புர்காவை அகற்றி விட்டு கடமைக்கு வருமாறு பணித்த நிலையில், வைத்தியர் ஒருவர் தனது, தொழிலை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகன்றது.
கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் ஹோமாகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், புர்காவுடன் குறித்த வைத்தியர் தனக்கு சிகிச்சை அளிக்க வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
பின்னர் வைத்தியசாலையின் நிர்வாகம், புர்காவை அகற்றி விட்டு பணிக்கு வருமாறு குறித்த மருத்துவரை பணித்துள்ளது.
பின்னர் குறித்த வைத்தியர் முன்னறிவிப்பு இன்றி பணிக்கு வருகைத் தராதிருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் தனது இராஜினாமா கடிதத்தை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை அடுத்து புர்காவை தடை செய்து வர்த்தமானி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: