Home » » அம்பாறை நிந்தவூரில் கைப்பற்றப்பட்ட பதிவுசெய்யப்படாத வானின் உரிமையாளர் கண்டுபிடிப்பு!

அம்பாறை நிந்தவூரில் கைப்பற்றப்பட்ட பதிவுசெய்யப்படாத வானின் உரிமையாளர் கண்டுபிடிப்பு!

அம்பாறை நிந்தவூரில் கைப்பற்றப்பட்ட பதிவு செய்யப்படாத வான் சங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத்தாக்குதலை நடத்திய சர்கான் ஹஸ்மியின் மைத்துனரான இலியாஸ் என்பவருடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி அக்கரைப்பற்றில் இந்த வான் உடனடி காசு கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த வானில் நடத்தப்பட்ட தேடுதலில் இரண்டு அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை பிளவுபட்டதேசிய தவ்ஜீத் ஜமாத் அமைப்புக்கு தலைமை தாங்கிய சர்கான் ஹஸ்மி கடந்த ஞாயிற்றுக்கிழமை சங்கரில்லா ஙோட்டலில் நடந்த தாக்குதலில் பங்கெடுத்தார் என தேசிய புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |