சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றையதினம் 1000 கோடி ரூபா பெறுமதி கொண்ட போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அவரது விசேட உத்தரவுக்கு அமைய 1000 கோடி ரூபா பெறுமதியை கொண்ட இந்த போதைப்பொருள் இன்றைய தினம் களனிய மகுறுவெலவில் எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர் இந்த 799 கிலோ கிராம் போதை பொருள் இன்று காலை அழிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஊடகவியலாளர் மத்தியில் இடம்பெற இருப்பதாக போதை பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த முகார கித்தலவ ஆராச்சி தெரிவித்திருந்த நிலையில் எராளமான ஊடகவியலாளர்களும் ஸ்தலத்தில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments: