Home » » பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை


அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 13.03.2019 அன்று சேவையிலிருந்து விலகியுள்ளனர்.
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரித்தல், 2016 ஆம் ஆண்டின் பின்னர் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய சம்பள திட்டத்தை மீண்டும் பெற்றுக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், 13.03.2019 அன்று சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் மலையகத்திலும் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதோடு, சில ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளித்துள்ளனர்.
அட்டனில் பொஸ்கோ கல்லூரி மற்றும் ஹைலண்ஸ் கல்லூரி, ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை மேலும் குறிப்பிடதக்கது.
DSC05028
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |