ரூபாவின் பெறுமானம் கடந்த இரு மாதங்களில் இரண்டு தசம் ஐந்து சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் அவர் நேற்றை பதிலுரை நிகழ்த்தும்போது மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரம் மீண்டும் வழங்கப்படவிருப்பதாகவும், மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை அமுலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் 108 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.
விவசாயத்தை மேம்படுத்த 87 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 comments: