இலங்கை ரூபா தொடர்ந்து மதிப்பிழந்துவரும் நிலையில் அதனை சீர் செய்வதற்காக 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற்றுக்கொள்ளப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரை ஆற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் சார்க் நாணய திட்டத்தின் கீழ் 400 மில்லியன் டொலர்களை இந்திய மத்திய வங்கியிடம் இருந்தும் சீனாவின் பண்டா முறி மற்றும் ஜப்பானின் சாமுராய் முறி ஆகியவற்றிடமிருந்து தலா 500 மில்லியன் டொலர்களை ஏனைய சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து 1 பில்லியன் டொலர்களையும் பெற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் கூறினார்.
இந்த கடங்களை பெரும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் அமெரிக்க செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.
0 comments: