Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தீர்ப்பு பாதகமாக வந்தால் பொதுவாக்கெடுப்பு!

நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து ஜனாதிபதி வெளி­யிட்ட வர்த்தமானி அறிவிப்பு தவறு என்று உயர் நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­னால், பொது வாக்­கெ­டுப்­புக்­குச் செல்­வோம் என்று மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்­தார்.
ஜனாதிபதியின் முடிவு சரி­யா­னது என்று உயர் நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­னால், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­கான ஏற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டும். ஜனாதிபதியின் முடிவு தவ­றா­னது என்று தீர்ப்பு வழங்­கி­னால், உட­ன­டி­யாக பொது­மக்­கள் கருத்­த­றி­யும் பொது­வாக்­கெ­டுப்­புக்­குச் செல்­வ­தற்கு ஜனாதிபதி முடிவு செய்­துள்­ளார்.
ஜனாதிபதியின் முடிவு தவ­றா­னது என்று நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­னால், அரச தலை­வர் அர­ச­மைப்பை மீறிச் செயற்­பட்­டுள்­ளார் என்­ப­தால், அவர் பொது­வாக்­கெ­டுப்­பைக் கோரு­வ­தற்கு முடி­யாது என்று சில சட்­டத்­த­ர­ணி­கள் தெரி­வித்­துள்­ள­னர். ஆனா­லும், மக்­க­ளின் ஆணையே எல்­லா­வற்­றுக்­கும் மேலா­னது என்ற அடிப்­ப­டை­யில் ஜனாதிபதி பொது­வாக்­கெ­டுப்­புக்­குச் செல்­வார் என்று ஜனாதிபதிக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன. இதனை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யி­லேயே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோன் சென­வி­ரட்­ன­வின் கருத்­தும் அமைந்­துள்­ளது.

Post a Comment

0 Comments