மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் இன்று மதியம் அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற இன் நிகழ்வில் காணாமல்போனவர்களின் உறவுகள் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.




0 Comments