மகிந்த அரசுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை தொடரும். மீண்டும் ஜனவரி மாதம் 16,17,18 ஆம் திகதிகளில் எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தாக்கல் செய்த மனு மீதான வழக்கின் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக தொடர்வதற்கு கடந்த 3ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடை வித்தது.
இந்நிலையில், மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பு உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தது. இதன் பிரகாரமே இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக தொடர்வதற்கு கடந்த 3ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடை வித்தது. இந்நிலையில், மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பு உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தது. இதன் பிரகாரமே இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 Comments