Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மகிந்தவுக்கு பிரதமர் பதவியில் தொடர முடியுமா? : 3 மணிக்கு தீர்ப்பு


மகிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை சட்ட விரோதமாகுமெனவும் இதன்படி அவரின் பதவியேற்பை செல்லுபடியற்றதாக்குமாறு வலியுறுத்தி 122 எம்.பிக்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று பிற்பகல் 3 மணிக்கு பின்னர் வழங்கப்படவுள்ளது.

122 எம்.பிக்களால் கடந்த வாரத்தில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பின்னர் இன்றைய தினம் வரை அந்த விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று மாலை அது தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments