Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அலரி மாளிகையை விட்டு ரணில் வெளியேறமாட்டார்! - ஐதேக அறிவிப்பு

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலேயே ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தங்கியிருப்பார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இலங்கையின் பிரதமர் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவே. இதன் காரணமாக பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலேயே ரணில் விக்ரமசிங்க தங்கியிருப்பார். நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானதாகும். இதன்காரணமாக இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்“ என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments