Home » » சபாநாயகருக்கு சம்பந்தன் விடத்துள்ள அவசர கோரிக்கை

சபாநாயகருக்கு சம்பந்தன் விடத்துள்ள அவசர கோரிக்கை

அரசியலமைப்பின் சிறப்புரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவரும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளை அடையாளம் கண்டு கொண்டு,சட்டவாதிக்கத்தை முன்கொண்டு செல்வதற்காக நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |