போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சாலிய பெரேரா என்ற நபர் தாய்லாந்து பேங்கொக் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நேற்றைய தினம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 வருடங்களுக்கு முன்னர் இவர் தாய்லாந்துக்கு தப்பிச் சென்று தலை மறைவாக இருந்து வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
0 comments: