Advertisement

Responsive Advertisement

சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்!

சட்டசிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.
எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மல்வத்துபீட மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது விடயம் தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு ஒன்று எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Post a Comment

0 Comments