Home » » மட்/செட்டிபாளையம் கிராமத்தில் கொள்ளையிட்ட கும்பல் காருடன் கைது !!

மட்/செட்டிபாளையம் கிராமத்தில் கொள்ளையிட்ட கும்பல் காருடன் கைது !!


மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டொன்றை உடைத்து கொள்ளையிட்ட கும்பலை நேற்று மாலை கைது செய்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எனவும், ஏனைய 4 பேரும் கொள்ளையிடப்பட்ட பொருட்களை வாங்கியவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 31 பவுண் தங்க நகை, 2 இலட்சம் ரூபா பணம், 2 டிஜிட்டல் கமராக்கள், கைத்தொலைபேசிகள் மற்றும் கொள்ளையிட பயன்படுத்தப்பட்ட கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.



சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பல இடங்களில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |