Advertisement

Responsive Advertisement

கொமாண்டோ படைக்கு இராணுவத் தளபதி முக்கிய உத்தரவு!

நாட்டின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலையை எதிர்கொள்வதற்கான உடனடித் திட்டங்களுடன் தயாராக இருக்குமாறு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கொமாண்டோபடைப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தாமரைத் தடாகம் அரங்கில் பணயக் கைதிகளை மீட்கும் கொமாண்டோ தாக்குதல் ஒத்திகை ஒன்று கடந்த 20ம் திகதி நடத்தப்பட்டது. இதன் போது அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம், ஜனாதிபதியின் இல்லம், அலரி மாளிகை, மத்திய வங்கி போன்ற நாட்டின் முக்கியமான கேந்திர நிலைகளின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களைத் தயாரிக்குமாறே இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments