Home » » வடக்கு கிழக்கில் நான் செய்த வேலைகளை நல்லாட்சி அரசு மறைத்துவிட்டது: மகிந்த ராஜபக்ஷ

வடக்கு கிழக்கில் நான் செய்த வேலைகளை நல்லாட்சி அரசு மறைத்துவிட்டது: மகிந்த ராஜபக்ஷ


தான் வடக்கு கிழக்கில் செய்த அபிவிருத்தி திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் மறைத்து விட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கம் ஒழுங்கான முறையில் பொருளாதாரத்தை முகாமை செய்யுமாக இருந்தால், கடன் அடைப்பதற்கு ஹம்பாந்தோட்ட துறைமுகத்தையும், மத்தளை விமான நிலையத்தையும் வெளிநாட்டுக்கு விற்பனை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் சொல்லும் நியாயம் பொருத்தமற்றதாகும். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை முற்றும் தவறானதாகும்.
கடந்த எமது அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கும் கடன் பெற்றது. அங்கும் குடிநீர், மின்சாரம், வீட்டு வசதி போன்றவற்றை மேற்கொள்ள கடன் நிதி பயன்படுத்தப்பட்டது.
இந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திக்காக கடன் பெற்றது என்பதை மறைத்து தெற்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு கடன் பெற்றதை மட்டுமே பெரிதுபடுத்திப் பேசுகின்றது” என கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |