மட்டக்களப்பு- கித்துள் காட்டில் நேற்றிரவு வேட்டைக்குச் சென்றவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்தார். கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கருப்பையா ராமகிருஷ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
|
குறித்த நபர் நேற்று இரவு உள்ளுர் துப்பாக்கியுடன் மிருக வேட்டைக்குச் சென்ற போது அவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இதனை அடுத்து அவரை செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது, வழியிலேயே உயிரிழந்துள்ளதார். உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
|
0 Comments