பனை அபிவிருத்திச் சபையின் சந்தைப்படுத்தல் விரிவாக்கத்தின் பொருட்டும், வாடிக்கையாளர்களின் தேவைகளை திருப்திப்படுத்தவும்புதிய கற்பக விற்பனை நிலையம் கதிர்காமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தில் இல.01, செல்லக்கதிர்காமம் வீதி, புதியநகர், கதிர்காமம் எனும் முகவரியில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கற்பக விற்பனை நிலையத்தின் ஊடாக மொத்த சில்லறை வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, சிறப்புக் கட்டளைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாடிக்கையாளர்களின் விருப்புக்கு ஏற்ப கைப்பணி உற்பத்திப் பொருள்கள், உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முகாமையாளர் மேலும். குறிப்பிட்டார்.(15)
0 comments: