Home » » பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் மாற்றம் வருமா? : 10ஆம் திகதிக்கு பின் தெரியும் என்கிறார் மைத்திரி

பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் மாற்றம் வருமா? : 10ஆம் திகதிக்கு பின் தெரியும் என்கிறார் மைத்திரி

பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விகளுக்கு 10ஆம் திகதிக்கு பின்னரே பதில் கிடைக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் பத்திரிகையாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தூய்மையான ஊழல் அற்ற அரசியல் பயணத்திற்கு தூய்மையான அரசியல்வாதிகள் இணைய வேண்டும். என்பதே இங்கு பிரச்சினையாக இருக்கின்றது. இதனால் அது தொடர்பாக நான் 10ஆம் திகதிக்கு பின்னர் சகல தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்துவேன். தவறுகள் செய்யாத , தவறுகளுடன் தொடர்புபடாத பயணத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக அரசாங்கத்துடனும் , எதிர்க்கட்சியுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டமொன்றை நான் தயாரிப்பேன். என அவர் தெரிவித்துள்ளார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |