மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் இன்று முதல் இலவச மருத்துவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைய, குறித்த வைத்தியசாலைக்கு நிர்வாகக் குழுவை நியமிக்க அனுமதி கிட்டியது.
இதன்படி, இதன் புதிய தலைவராக வைத்தியர் அஜித் மென்டிஸ் செயற்படுவதோடு, பணிப்பாளர் நாயகமாக ரியல் அத்மிரல் என்.ஈ.டப்ளியூ.ஜெயசேகர கடமையாற்றுகிறார்.
இந்த வைத்தியசாலை ஊடாக இன்று முதல் அனைத்து நோயாளர்களுக்கும் தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதோடு, இதற்குத் தேவையான மருந்துகள் அனைத்தும் நேற்று மாலை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments: